Monday, September 26, 2011

யார் அந்த நாலு பேர்...


யார் அந்த நாலு பேர்...
நாம் எப்போதும் பயப்படும் அந்த முகம் தெரியாதவர்கள்...
நாம் கிழே விழுந்ததும் எழுவதக்கு முன் தேடும் உருவமில்லாதவர்கள்...
நம் மனதிற்கு பிடித்ததை செய்ய தடை சொல்லும் தகுதில்லாதவர்கள் ...
சமுதாயம் என்னும் பரமபதத்தில் தேவையில்லாத நேரத்தில் விழுகும் தாயங்கள்...
அன்று ராமனையே கேள்வி கேட்டு சீதையை வேள்வியில் இறக்கியவர்கள்...
அவர்களுக்கு நாம் மட்டும் எம்மாத்திரம்...
நமக்கு இருப்பதோ ஒரு வாழ்க்கை...
ஏன் வாழ வேண்டும் செயற்கையாய்..!!!

-
சேது

Thursday, August 25, 2011

வெப்பம் !!!



இங்கு நான் வெப்பத்தால் உறுகவில்லை...
உன்னை நினைத்துதான் உருகினேன்....
என் காதல் எனும் ஜோதியை ஏந்தி நிற்கிறேன்...
அணையும் முன் வருவாயா...!!!!

இப்படிக்கு,

மெழுகுவர்த்தி

Tuesday, August 23, 2011

எது சிறந்தது ???



கரிசல் மண் மேடையில்..
பச்சை புற்களின் பார்வையில்..
நடக்குதுமா ஒரு பட்டிமன்றம்..
எது சிறந்தது???
குடையா...இல்லை செருப்பா...
நடுவராய் நிற்கிறான்
சின்ன சாலமன் பாப்பையா....


Monday, August 22, 2011

மணி ஆறு !!!



என்றும் எல்லோருக்கும் நேரம் காட்டும் நான்
எப்போதும் ஓடி கொண்டிருப்பதால் ஒய்வு எடுத்தேன்...
சில மணித்துளிகள் கழித்து நேரம் தெரிவில்லை எனக்கு...
என்னை சரிப்படுத்த துணையாய் நின்றாள் மலர்த்தோழி...
அவள் காதலனான சூரியன் மறைவால் வாடிய முகத்தை கண்டு
உணர்ந்தேன் மணி ஆறு...

இப்படிக்கு,
கடிகாரம்

Wednesday, August 17, 2011

என் கை பிடித்தவன் !!!



இந்த படத்தை பார்த்தவுடன் தோன்றிய சில வரிகள்...


பேச முடியாத பெண் சொல்ல துடித்த வார்த்தைகள் இதோ -

கல்யாண சந்தை என்னும் குளத்தில்
என்னை பார்க்க வந்தவர்கள் அனைவரும் பேசினார்கள்...
என்னால் கேட்கமட்டும்தான் முடியும் என்று தெரிந்தவுடன்...
கடிதம் போடுவதாக கூறி காணாமல் போனவர்கள்...
நீ மட்டும் தான் என் மௌனத்தின் அர்த்தம் புரிந்து
என் கை பிடித்தவன்...
இனி நீ என் கணவனாய்...கடவுளாய்... தோழனாய்...
நான் பேச போகும் மொழியாய்....
இனி அழ தேவையில்லை என்பதால்
சிந்துகிறேன் சில துளிகளையும் ஆனந்தமாய் !!!