Wednesday, August 17, 2011

என் கை பிடித்தவன் !!!



இந்த படத்தை பார்த்தவுடன் தோன்றிய சில வரிகள்...


பேச முடியாத பெண் சொல்ல துடித்த வார்த்தைகள் இதோ -

கல்யாண சந்தை என்னும் குளத்தில்
என்னை பார்க்க வந்தவர்கள் அனைவரும் பேசினார்கள்...
என்னால் கேட்கமட்டும்தான் முடியும் என்று தெரிந்தவுடன்...
கடிதம் போடுவதாக கூறி காணாமல் போனவர்கள்...
நீ மட்டும் தான் என் மௌனத்தின் அர்த்தம் புரிந்து
என் கை பிடித்தவன்...
இனி நீ என் கணவனாய்...கடவுளாய்... தோழனாய்...
நான் பேச போகும் மொழியாய்....
இனி அழ தேவையில்லை என்பதால்
சிந்துகிறேன் சில துளிகளையும் ஆனந்தமாய் !!!

No comments:

Post a Comment