Wednesday, August 10, 2011

மனிதம் வளர்ப்போம்!!!



"மனிதம் வளர்ப்போம்" என்ற தலைப்பில் பேசி
கைதட்டுகளை பெற்று பெரிய காரில் ஏறியவர்
வந்து சிக்னலில் நின்றபோது ...
விளையாட்டை மறந்து பொம்மை விற்கும் சிறுவனையும்...
பச்சை குழந்தையை காட்டி பிச்சை எடுக்கும் பெண்ணையும்...
படிக்க வசதி இல்லாமல் புத்தகம் விற்கும் வாலிபனையும்...
சில மூன்றாம் பால் இனத்தவரையும் பார்த்தப்பின்...
தன் முகத்தை சுளித்துக்கொண்டு
கார் என்னும் சவ பெட்டியின் ஜன்னலை மூட தொடங்கினார்
மனிதத்தை கொன்று புதைத்துவிட்டு ...

சேது


No comments:

Post a Comment